புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கன்னடத்தில் உருவான கேஜிஎப் படங்களின் இரண்டு பாகங்களையும் இயக்கிய பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் பான் இந்தியா படமாகும். இந்த படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பில் தற்போது இணைந்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
சலார் படப்பிடிப்பில் நடக்கும் கலாட்டாக்களை அவ்வப்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு வரும் ஸ்ருதி, சமீபத்தில் பிரபாஸ் தனக்கு மதிய உணவு அனுப்புவதாக சொல்லி அதை படமெடுத்தும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது, எனக்கு பிடித்தமான டைரக்டர்களை எரிச்சலூட்டுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என கூறியிருப்பவர், அவரை எரிச்சலூட்டுவதை தான் ரசிப்பதாக பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அத்துடன் பிரசாந்த் நீலுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.