மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு முன்பு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டது. என்றாலும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதிக்கப்பட்டது. தற்போதுதான் தமிழ் படங்கள் தியேட்டரில் வெளியாகத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூடும் இடங்களுக்கு தடைவிதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தியேட்டர்களும் மூடப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் தியேட்டர்கள் ஞாயிற்றுக் கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு அதிகமான வசூலாகும் நாள் ஞாயிற்றுக் கிழமைதான், அந்த நாளில் தியேட்டர் மூடப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த தடை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.