வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

கொரோனா ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக ஒரு மாதத்திற்கு முன்பு தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டது. என்றாலும் 50 சதவிகித இருக்கைகளுக்கே அனுமதிக்கப்பட்டது. தற்போதுதான் தமிழ் படங்கள் தியேட்டரில் வெளியாகத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூடும் இடங்களுக்கு தடைவிதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தியேட்டர்களும் மூடப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் விடுத்துள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்கள், பூங்காக்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் தியேட்டர்கள் ஞாயிற்றுக் கிழமை இயங்க தடை விதிக்கப்படுகிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமாவுக்கு அதிகமான வசூலாகும் நாள் ஞாயிற்றுக் கிழமைதான், அந்த நாளில் தியேட்டர் மூடப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தியேட்டர் உரிமையாளர்கள், தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் இந்த தடை மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என்ற அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.




