சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! | வில்லன் நடிகரின் வீண் பிடிவாதத்தால் மோகன்லால் ராஜினாமா செய்தார் : மாலா பார்வதி | பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்து நடிப்பது விஜய்சேதுபதியா? சூரியா? | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு | ஹிந்தியில் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ‛ரங்கஸ்தலம்' | மோகன்லாலை போலத்தான் கஜோலும் : பிரமிக்கும் பிரித்விராஜ் |
தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் பிரகாஷ்ராஜும், மோகன் பாபுவின் மகனும் தெலுங்கு நடிகருமான விஷ்ணு மஞ்சுவும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நடிகை ஜீவிதா, பிரகாஷ்ராஜ் அணிக்கு தாவி அந்த அணியின் சார்பில் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
தற்போது தேர்தல் சூடுபிடித்து வருகிறது. பிரகாஷ்ராஜ் கன்னடர், அவர் தெலுங்கு நடிகர் சங்கத் தலைவர் ஆககூடாது என்று ஒரு பக்கம் பிரச்சாரம் நடந்து வருகிறது. விஷ்ணு மஞ்சு அணிக்கு என்.டி.ஆர் குடும்பமும், பிரகாஷ்ராஜூக்கு சிரஞ்சீவி குடும்பமும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது ஆதரவாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்திய பிரகாஷ்ராஜ் தான் வெற்றி பெற்றால் தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு 10 கோடி நன்கொடை தருவதாக கூறியதாக தகவல்கள் வெளியானது. இதை தொடர்ந்து விஷ்ணு மஞ்சு அணியினர் வாக்களிக்கும் தகுதி படைத்த உறுப்பினர்களுக்கு கணிசமான பணம் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பிரகாஷ்ராஜ் கொரோனா விதிமுறைகளை மீறி விருந்து நிகழ்ச்சி நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரகாஷ்ராஜ் "கொரோனா விதிமுறைகளை பின்பற்றிதான் ஆலோசனை கூட்டம் நடத்தினேன். விருந்து நிகழ்ச்சி எதுவும் நடத்தவில்லை. அரசியல் கட்சிகள் கொரோனா விதிமுறைகளை மீறி மக்களை கூட்டி நிகழ்ச்சி நடத்துவது பற்றி கேள்வி கேட்டால் நன்றாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.