வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

கொரோனா வந்தாலும் வந்தது, அது பலருடைய வாழ்க்கையில் பெரும் புயலை வீசிவிட்டுச் சென்றது. ஆனால், சினிமாவைப் பொறுத்தவரையில் சர்ச்சைக்குரிய புதிய பாதை ஒன்றை திறந்துவிட்டுச் சென்றுவிட்டது.
ஓடிடியில் புதிய படங்கள் நேரடி வெளியீடு என்பது தான் அந்த புதிய பாதை. ஓடிடியில் வெளியாகும் அனைத்து படங்களும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் சில பல முக்கிய படங்கள் ஓடிடியில் வெளியானது, தியேட்டர்காரர்களுக்கு எரிச்சலை உண்டாக்கியது. அந்தப் படங்கள் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் நல்ல வசூலையும், லாபத்தையும் கொடுத்திருக்கும்.
இப்போது வாராவாரம் ஓடிடியில் புதிய படங்கள் வெளியாகி தியேட்டர்காரர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வாரம் வெளியான 'தலைவி, லாபம்' ஆகிய படங்கள் வசூலைத் தரவில்லை. பல ஊர்களில் அப்படங்கள் இன்றே கடைசி என்கிறார்கள். அடுத்து நாளை 'கோடியில் ஒருவன், பிரண்ட்ஷிப்' ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியாக உள்ளன. இப்படங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பது நாளைதான் தெரிய வரும்.
இதனிடையே, ஓடிடி தளங்களில் வாராவாரம் படங்கள் வர ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 'டிக்கிலோனா' ஓடிடியிலும், 'துக்ளக் தர்பார்' முதலில் டிவி, மறுநாள் ஓடிடியிலும் வெளியாகியது. நாளை 'அனபெல் சேதுபதி' படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. அடுத்த வாரம் செப்டம்பர் 24ம் தேதி 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்' ஓடிடியில் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று வாரங்கள் ஓடிடியில் படங்கள் வருவது திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




