பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் என்பவர் இயக்கத்தில் சாந்தனு, அதுல்யா ரவி நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் உருவாகியுள்ளது. பாக்யராஜ், யோகிபாபு, மனோபாலா, பிக்பாஸ் ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை லிப்ரா புரொடக்சன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரித்ததுடன் நடிக்கவும் செய்துள்ளார்.
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சாந்தனு, அதுல்யா, மிர்ச்சி சிவா, யோகிபாபு, ரவீந்தர் சந்திரசேகர், ஸ்ரீஜர், தருண் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சாந்தனு பேசும்போது : இந்தப் படம் பார்க்கும் போது லாஜிக் இல்லாமல் பார்த்தால் ரெண்டு மணி நேரம் நல்லா குடும்பத்தோட உட்கார்ந்து சிரிக்கலாம். இந்தப் படம் அடல்ட் படம் என்று நிறைய பேர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி கிடையாது. இது குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கக் கூடிய எண்டெர்டெயின்மெண்ட் படம். ஒருத்தர் ஜெயிக்கனும் என்றால் அவர் மட்டுமே நினைத்தால் மட்டும் போதாது. குறைந்தது 10 பேராவது நினைக்க வேண்டும். நீங்கள் அதை செய்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பேசினார்.
அதுல்யா ரவி பேசிய போது, "சாந்தனு மிகவும் இனிமையான நடிகர். படப்பிடிப்பில் இருக்கும் போது சில சில குறிப்புகள் கொடுப்பார். படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்வோம். எப்போதும் ஊக்குவிக்கும் வகையில் பேசக்கூடியவர். கண்டிப்பாக இந்த படம் உங்களுக்கு திருப்புமுனையாக இருக்கும். இந்த படம் கண்டிப்பா முழுவதுமாக நகைச்சுவை கலாட்டா நிறைந்த படமாக இருக்கும். நான் படம் முழுக்க பார்க்கவில்லை ஆனால் டப்பிங் செய்தும் மிகவும் ரசித்து செய்தோம். " என்று கூறினார்.