மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' |
சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னணியில் இருந்த ஒரு கதாநாயகி திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி, டீனேஜ் பெண்ணுக்கு தாயாகி, பின்னர் கணவரிடம் இருந்து விவாகரத்தும் பெற்ற நிலையில், மீண்டும் திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வர முடியுமா என்றால், முடியும் என சாதித்து காட்டி வருகிறார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். தற்போது மலையாள சினிமாவின் பிஸியான நடிகையாக பல படங்களில் நடித்துவரும் மஞ்சு வாரியர் தனது 43வது பிறந்தநாளை கொண்டாடினார்.
அவரது பிறந்தநாளை முன்னிட்டு அவரது புதிய படங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. இதில் மலையாளம் மற்றும் அரபி என இரு மொழிப்பாடமாக உருவாகும் ஆயிஷா என்கிற படத்தில் நடிக்கிறார் மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனரான ஆமிர் பள்ளிக்கல் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். முதன்முறையாக மலையாளம் மற்றும் அரபியில் ஒரே நேரத்தில் உருவாகும் படம் இது என்றும் இதில் நடிக்கப்போகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார் மஞ்சு வாரியர்.