தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
மலையாளத்தில் பிரேமம் என்கிற ஹிட் படத்தையும், நஸ்ரியா, சாய் பல்லவி உள்ளிட்ட நான்கு கதாநாயகிகளையும் திரையுலகுக்கு கொடுத்தவர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படத்தை தொடர்ந்து கிட்டத்தட்ட ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தனது மூன்றாவது படத்தை இயக்குகிறார். பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார், இந்த படத்தை பிரித்விராஜ் மற்றும் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்த நிகழ்வில் பிரித்விராஜ், நயன்தாரா இருவருமே கலந்து கொள்ளவில்லை என்றாலும், பிரித்விராஜின் தாயார் மல்லிகா சுகுமாரன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக அல்போன்ஸ் புத்ரன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பஹத் பாசில் ஆகியோரை வைத்து படங்கள் இயக்குவதாக சொல்லப்பட்டு அது வெறும் பேச்சாகவே போய்விட்ட நிலையில், தற்போது பிரித்விராஜை வைத்து இவர் இயக்கும் படம் அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.