விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் |
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் நடுவன். சரண்குமார் இயக்கி உள்ள இந்த படத்தில் பரத் ஹீரோ. பைரவா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அபர்னா வினோத் ஹீரோயின். இவர்கள் தவிர கோகுல் ஆனந்த் பாலா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தரண்குமார் இசை அமைத்துள்ளார்.
இந்த படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. படம் குறித்து இயக்குனர் சரண்குமார் கூறியதாவது: மனதார நேசிக்கும், நம்பும் நபர்கள் ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, என்ன செய்வீர்கள்? அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வீர்கள்? அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவீர்களா அல்லது அவர்களின் குற்றத்தை சொல்லி எதிர்ப்பீர்களா? என்பதுதான் படம்.
வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் நிவாஸ் என்கிற இளைஞனின் கதை. நிவாஸாக பரத் நடித்திருக்கிறார். நடுவன் என்றால் மத்தியதர வாழ்க்கை வாழ்கிறவன். மிடில் கிளாஸ் மேன் என்று பொருள்.
தன்னை ஏமாற்றியவர்களை கண்டுபிடிக்க முயல்கிறார். கதாநாயகன் அந்த பாதையில் செல்லும்போது, சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நேசித்து நம்பியவர்களின் ஏமாற்றுதல் மற்றும் வஞ்சத்தை அவர் கண்டுபிடித்து சமாளிக்க வேண்டும். இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில், அவர் செல்லும் போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. ஆனால் இந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவாரா, அல்லது அவர் நேசிப்பவர்களுக்காக தனது அறியாமைக்கு அடிபணிவாரா? என்பதே கதை. என்றார்.