Advertisement

சிறப்புச்செய்திகள்

படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு மீண்டும் ரஜினி, அஜித் படங்கள் மோதல்

09 செப், 2021 - 11:07 IST
எழுத்தின் அளவு:
Rajini,-Ajith-clash-again-for-Deepavali

கடந்த 2019ம் ஆண்டு ரஜினி நடித்த பேட்ட படமும், அஜித் நடித்த விஸ்வாசம் படமும் தியேட்டரில் மோதிக் கொண்டன. இதில் விஸ்வாசமே வெற்றி பெற்றது. இந்த நிலையில் வருகிற தீபாவளிக்கு ரஜினி நடித்த அண்ணாத்த படமும், அஜித் நடித்த வலிமை படமும் மோதிக் கொள்ள இருக்கிறது.


விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா தான் அண்ணாத்த படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டது.


ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் ஹீமா குரைஷி, கார்த்திகேய கும்மகொண்டா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. அதற்கு பிந்தைய பணிகள் நடந்து வருகிறது. இந்த படம் ஆயுத பூஜை தினத்தன்று (அக்டோபர் 14) வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி இருப்பதால் அஜித் படங்களுக்கே உரிய ஓப்பனிங் கலெக்ஷன் பாதிக்கும் என்பதால் படத்தை ஆயுத பூஜைக்கு வெளியிட தயாரிப்பாளர் தயங்குவதாக தெரிகிறது.


கொரோனா 3வது அலை தொடங்காவிட்டால் தீபாவளியை ஒட்டி 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. அதனால் வலிமை படத்தையும் தீபாவளி அன்று வெளியிட தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்றைக்குள்ள சூழ்நிலையில் தியேட்டர் உரிமையாளர்கள் நம்பி இருப்பது பெரிய நடிகர்களின் படங்களைத்தான். ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளிவருவது தியேட்டர் வசூலை பாதிக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். இதனால் இரு படங்களையும் வெவ்வேறு நாட்களில் வெளியிட அவர்கள் தயாரிப்பாளர்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஷங்கர்-ராம்சரண் பட டைட்டில் விஸ்வம்பரா?ஷங்கர்-ராம்சரண் பட டைட்டில் ... வாள்வீச்சு வீராங்கனைக்கு தங்க சங்கிலி பரிசளித்து பாராட்டிய சசிகுமார் வாள்வீச்சு வீராங்கனைக்கு தங்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)