நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் ஷங்கர். அவருடைய இயக்கத்தில் நடிக்க ஆசை என பல நடிகர்களும், நடிகைகளும் பேட்டி கொடுத்ததை பல முறை பார்த்திருக்கிறோம்.
தமிழில் முன்னணியில் இருக்கும் ஷங்கர் முதல் முறையாக தெலுங்கில் ராம்சரண் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போகிறார். இன்று இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றது. படத்திற்கான முதல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள்.
அந்த போஸ்டரில் படத்தின் நாயகன் ராம்சரண், நாயகி கியாரா அத்வானி, படத்தின் இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், மற்றொரு நாயகி அஞ்சலி, நடிகர்கள் ஜெயராம், சுனில் உள்ளிட்டோர் கோட், சூட் அணிந்து கொண்டு, பின்னணியில் ஆயிரக்கணக்கானோர் உடன் வர, கையில் பைல்களுடன் படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.
இந்த போஸ்டரில் படத்தின் நாயகன் ராம்சரண் பெயர் தான் முதலில் இடம் பெற்றுள்ளது. அதற்குக் கீழேதான் இயக்குனர் ஷங்கர் பெயர் உள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களில்தான் ஷங்கர் இப்படி தனது பெயரை இரண்டாவது வர சம்மதித்துள்ளார். மற்ற படங்களில் அவருடைய பெயர்தான் முதலில் இருக்கும். மேலும், 'ஷங்கரின்....' என்றுதான் படப் பெயரையும் குறிப்பிடுவார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி' படத்தின் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் எனப் பெயரெடுத்த ராஜமவுலியின் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' பட விளம்பரங்களில் அவரது பெயருக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஷங்கர் அந்த முன்னுரிமையை இந்தப் புதிய படத்தில் விட்டுக் கொடுத்துவிட்டார் என்றே தெரிகிறது. மேலும், இந்தப் படத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் 'ஆர்சி 15, எஸ்விசி 50' என்றே குறிப்பிடுகிறார்கள்.
ஷங்கரின் இந்த மாற்றம் ஆச்சரியத்தைக் கொடுப்பதாக உள்ளதென கோலிவுட்டில் ஆச்சரியப்படுகிறார்கள்.