கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு |

மலையாள திரையுலகில் இருபது வருடங்களுக்கு முன்பு முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள் தான் மஞ்சுவாரியர், கீது மோகன்தாஸ், மற்றும் சம்யுக்தா வர்மா. இதில் கீது மோகன்தாஸ் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியை திருமணம் செய்து கொண்டபின் நடிப்பிலிருந்து ஒதுங்கினாலும், அப்படியே இயக்குனராக மாறிவிட்டார். நடிகை சம்யுக்தா வர்மாவும் நடிகர் பிஜுமேனனை திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.
மஞ்சுவாரியார் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர்கள் மூவரும் அவ்வப்போது ஒன்று கூடி அரட்டை அடிக்கவும் தங்களைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்து கொள்ளவும் தவறுவதில்லை
அப்படி சமீபத்தில் சம்யுக்தா மேனன், கீது மோகன்தாஸ் இருவரையும் சந்தித்துள்ளார் மஞ்சுவாரியர். மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சுவாரியர், “எதையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எப்போதும் நண்பர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்