பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
மலையாள திரையுலகில் இருபது வருடங்களுக்கு முன்பு முன்னணி கதாநாயகிகளாக வலம் வந்தவர்கள் தான் மஞ்சுவாரியர், கீது மோகன்தாஸ், மற்றும் சம்யுக்தா வர்மா. இதில் கீது மோகன்தாஸ் ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவியை திருமணம் செய்து கொண்டபின் நடிப்பிலிருந்து ஒதுங்கினாலும், அப்படியே இயக்குனராக மாறிவிட்டார். நடிகை சம்யுக்தா வர்மாவும் நடிகர் பிஜுமேனனை திருமணம் செய்துகொண்ட கையோடு சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.
மஞ்சுவாரியார் தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிசியாக நடித்து வருகிறார். இருந்தாலும் இவர்கள் மூவரும் அவ்வப்போது ஒன்று கூடி அரட்டை அடிக்கவும் தங்களைப் பற்றிய தகவல்களை அப்டேட் செய்து கொள்ளவும் தவறுவதில்லை
அப்படி சமீபத்தில் சம்யுக்தா மேனன், கீது மோகன்தாஸ் இருவரையும் சந்தித்துள்ளார் மஞ்சுவாரியர். மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள மஞ்சுவாரியர், “எதையும் எதிர்கொள்ள நேர்ந்தாலும் எப்போதும் நண்பர்களே” என்று குறிப்பிட்டுள்ளார்