நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' |

வரலாற்று நாவலை படிக்கும் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பமான பொன்னியின் செல்வன் நாவலுக்கு உயிர்கொடுக்கும் மிக பிரம்மாண்ட முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம். அதனால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது,பாலிவுட்டிலும் இருந்து முக்கிய நட்சத்திரங்களை அழைத்து வந்து நடிக்க வைத்து வருகிறார் மணிரத்னம். அந்த வகையில் இந்த படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் உள்ளிட்டோர் தங்களது படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது குறித்த தகவல்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துவரும் நடிகர் ரகுமானும் இந்த படத்தில் தன்னுடைய வேலைகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் மணிரத்னத்துடன் விடைபெறும் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள அவர், “பொன்னியின் செல்வன் என்கிற காவியத்தில் என்னுடைய பகுதி நிறைவடைந்தது. மணிரத்னத்துடன் பணிபுரிந்தது மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. விரைவில் அடுத்த படங்கள் குறித்த அப்டேட் தகவலை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்