அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
கடந்த 2002-ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஜெயம் படத்தின் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் தான் தெலுங்கு நடிகர் கோபிசந்த். பின்னாளில் ஹீரோவாக புரமோஷன் பெற்ற இவர், அதன்பிறகு வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவே இல்லை. தற்போது தமன்னாவுடன் இணைந்து சீட்டிமார் என்கிற படத்தில் நடித்துள்ள .கோபிசந்த்திடம், அந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் நீங்கள் மீண்டும் வில்லனாக நடிப்பீர்களா என்கிற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கோபிசந்த், “தொடர்ந்து ஹீரோவாகத்தான் நடிக்க போகிறேன். வில்லனாக நடிக்கும் எண்ணம் கொஞ்சம் கூட இல்லை. அப்படி நடித்து ஹீரோ இமேஜை நானே கெடுத்துக்கொள்ள மாட்டேன். முன்பு வில்லனாக நடித்தது கூட, என்னிடம் இருக்கும் நடிப்புத்திறமையை வெளியே காட்டுவதற்குத்தான்.. ஆனால் என்னுடைய நோக்கம் எப்போதுமே ஹீரோ ஆவதிலேயே இருந்தது” என கூறியுள்ளார்.