மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ஷனில் லியோ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 50 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக யாருடைய டைரக்சனில் விஜய் நடிக்க இருக்கிறார் என பல யூகங்கள் சோசியல் மீடியாவில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதில் குறிப்பாக வாரிசு படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு தெலுங்கு இயக்குனருடன் இணைந்து விஜய் பணியாற்ற உள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியானது.
தெலுங்கில் ரவி தேஜா நடித்த கிராக், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பாலகிருஷ்ணாவின் வீரசிம்ஹா ரெட்டி ஆகிய படங்களை இயக்கிய கோபிசந்த் மாலினேனி தான் விஜய் படத்தை இயக்கப் போகிறார் என ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தநிலையில் அவர் விஜய் படத்தை இயக்குவதற்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்பு இருக்கிறது என்பதை அவரே உறுதிப்படுத்தும் விதமாக ஒரு காரியம் செய்துள்ளார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணக்கை நடிகர் விஜய் துவங்கினார். தற்போது கோபிசந்த் மாலினேனி விஜய்யின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர ஆரம்பித்திருக்கிறார். இதிலிருந்து அவர் விஜய் படத்தை இயக்குவதை மறைமுகமாக உறுதி செய்து விட்டார் என்றே திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.