வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் ஆகிய ஹிந்தி, தெலுங்கு, கன்னட சினிமா உலகில் போதைப் பொருள் பயன்பாடு அதிகமாக உள்ளது பற்றிய பல துறைகளின் விசாரணை தீவிரமடைந்து வருகிறது.
தற்போது அமலாக்கப் பிரிவு இது குறித்த விசாரணையை தெலுங்குத் திரையுலக பிரபலங்களிடம் நடத்தி வருகிறது. தெலுங்கு இயக்குனரான பூரி ஜெகன்னாத் நேற்று விசாரணைக் குழுவினர் முன் ஆஜரானார். இந்த வழக்கில் 12 தெலுங்கு சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அவர்களிடம் 2015ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான வங்கிப் பரிவர்த்தனை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. நேற்று அவற்றை பூரி ஜெகன்னாத் விசாரணைக் குழுவிடம் அளித்துள்ளார். நேற்று அவரிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இன்று பூரி ஜெகன்னாத் உடன் சினிமா தயாரிப்பாளராக இருக்கும் நடிகை சார்மி அமலாக்கப் பிரிவு முன் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்பு இதே போன்றதொரு விசாரணைக்கு ஆஜராகும் போது காவலர் ஒருவர் தன்னைத் தொட்டார் என்ற குற்றச்சாட்டை எழுப்பினார் சார்மி. அதனால், இந்த முறை முழுவதும் பெண் காவலர்களை பாதுகாப்பிற்கு நிறுத்த உள்ளார்களாம்.
இந்த விசாரணை விவகாரங்களால் டோலிவுட்டில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




