புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள கன்னட நடிகையான சோனியா அகர்வாலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 40 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில்கள் சிக்கின.
சமூக வலைத்தளங்களில், தமிழ் படங்களில் நடித்தவரும், செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் சோதனை நடந்ததாக தகவல் பரவியது. சமூக வலைத்தளங்களில் சோனியா அகர்வாலின் படத்துடன் இந்த தகவல் வைரல் ஆனது.
இந்த நிலையில் நான் அவளில்லை. என் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் சோனியா அகர்வால். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என்ன நடந்தது என்று தெரியாமலே, கிடைத்த தகவலை உறுதி செய்யாமலேயே பகிர்ந்து விடுகிறார்கள். பொதுவாக சமூக வலைதள வதந்திகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்றாலும் இது மிகவும் தீவிரமான ஒரு விஷயம். குறைந்தபட்சம் என்னை அழைத்தாவது உறுதி செய்திருக்க வேண்டும்.
என் மீது அவதூறு பரப்பியதற்காவும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்காவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன், என்கிறார் சோனியா அகர்வால்.