வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? |
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் உள்ள கன்னட நடிகையான சோனியா அகர்வாலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் போதை பொருள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 40 கிராம் கஞ்சா, 12 மது பாட்டில்கள் சிக்கின.
சமூக வலைத்தளங்களில், தமிழ் படங்களில் நடித்தவரும், செல்வராகவனின் முன்னாள் மனைவியுமான நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதை பொருள் சோதனை நடந்ததாக தகவல் பரவியது. சமூக வலைத்தளங்களில் சோனியா அகர்வாலின் படத்துடன் இந்த தகவல் வைரல் ஆனது.
இந்த நிலையில் நான் அவளில்லை. என் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியுள்ளார் சோனியா அகர்வால். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: என்ன நடந்தது என்று தெரியாமலே, கிடைத்த தகவலை உறுதி செய்யாமலேயே பகிர்ந்து விடுகிறார்கள். பொதுவாக சமூக வலைதள வதந்திகளைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை என்றாலும் இது மிகவும் தீவிரமான ஒரு விஷயம். குறைந்தபட்சம் என்னை அழைத்தாவது உறுதி செய்திருக்க வேண்டும்.
என் மீது அவதூறு பரப்பியதற்காவும், தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்காவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன், என்கிறார் சோனியா அகர்வால்.