நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. அங்கு சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். கடைசி கட்ட படப்பிடிப்பை படம் நெருங்கி வருகிறது.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்புக்காக குவாலியரிலிருந்து இந்தூருக்கு ரயில் மூலம் இயக்குனர் மணிரத்னம், நடிகர் ரகுமான் உள்ளிட்ட படக்குழுவினர் பயணித்தனர். இன்று படத்தைப் பற்றிய அடுத்த அப்டேட் ஒன்றை ரகுமான் கொடுத்துள்ளார். 80, 90களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த பாபு ஆண்டனி 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அவருடைய படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
அது பற்றிய தகவலை ரகுமான் தெரிவித்துள்ளார். அவர், பாபு ஆண்டனி, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “ஒரு நல்ல பயணம் எனது நெருங்கிய நண்பா. மீண்டும் இருவரும் ஒன்றாக நடித்தது மிகவும் மகிழ்ச்சியானது. பழைய நினைவுகளை மீண்டும் மகிழ்ச்சியுடன் நினைக்க முடிந்தது. இந்த சரித்திரப் படத்தில் நீயும் இருப்பது மகிழ்ச்சி. உனது எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.