இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் சரித்திரப் படமான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது. அங்கு சரித்திரப் புகழ் வாய்ந்த இடங்களில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். கடைசி கட்ட படப்பிடிப்பை படம் நெருங்கி வருகிறது.
நேற்று இப்படத்தின் படப்பிடிப்புக்காக குவாலியரிலிருந்து இந்தூருக்கு ரயில் மூலம் இயக்குனர் மணிரத்னம், நடிகர் ரகுமான் உள்ளிட்ட படக்குழுவினர் பயணித்தனர். இன்று படத்தைப் பற்றிய அடுத்த அப்டேட் ஒன்றை ரகுமான் கொடுத்துள்ளார். 80, 90களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்த பாபு ஆண்டனி 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். அவருடைய படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
அது பற்றிய தகவலை ரகுமான் தெரிவித்துள்ளார். அவர், பாபு ஆண்டனி, ஐஸ்வர்ய லட்சுமி ஆகியோர் ஹோட்டலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “ஒரு நல்ல பயணம் எனது நெருங்கிய நண்பா. மீண்டும் இருவரும் ஒன்றாக நடித்தது மிகவும் மகிழ்ச்சியானது. பழைய நினைவுகளை மீண்டும் மகிழ்ச்சியுடன் நினைக்க முடிந்தது. இந்த சரித்திரப் படத்தில் நீயும் இருப்பது மகிழ்ச்சி. உனது எதிர்கால திட்டங்களுக்கு எனது வாழ்த்துகள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.