புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
திருமணம் குறித்து தன்னிடம் கேள்வி கேட்ட ரசிகைக்கு திருமணம் என்பது வெறும் நம் இணையரின் தோற்றம், பணம், குழந்தை போன்ற காரணிகளை மட்டுமே வைத்து தேர்வு செய்யக் கூடியதல்ல என ஸ்ருதி அறிவுரை கூறியுள்ளார்.
பிரபல நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி. தொழில்முறை சமையல் கலைஞரான இவர் சொந்தமாக ஆன்லைன் பேக்கரி ஒன்றை நடத்தி வருகிறார். கர்ப்பமாக இருந்த போது மெட்டர்னிட்டி போட்டோ ஷூட், குழந்தை பிறந்த பிறகு ஜோடியாக இருவரும் அளித்த பேட்டிகளின் மூலம் ஸ்ருதியை பலரும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
ஸ்ருதியும் தனக்கு தெரிந்த பொதுவான விஷயங்களையும், தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலையும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வந்தார். அந்த வகையில் ஸ்ருதியின் ரசிகை ஒருவர், எனக்கு திருமணமாக போகிறது. எனக்கு அவரை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால், என் பார்ட்னர் என்னை விட உயரம் குறைவு. இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு எதாவது அறிவுரை கூறுங்கள் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஸ்ருதி, ஸ்டீரியோடைப்பை ப்ரேக் செய்வது சுலபமான காரியமல்ல. சிறு வயதிலிருந்தே நமக்குள் புகுத்தப்பட்ட விஷயம். அதிலிருந்து ஒரு மணி நேரத்தில் வெளிவந்து விட முடியாது என கூறியுள்ளார். மேலும், அழகான முடி வைத்திருக்கும் நபரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். திருமணத்திற்கு பின் அவருக்கு முடி கொட்டும் பிரச்சனை வந்தால் அந்த காதல் போய்விடுமா?. அது போலதான் திருமணம் என்பது வெறும் புறத்தோற்றம், பணம், குழந்தை என்பதை மட்டுமே வைத்து தேர்வு செய்யக் கூடியதல்ல. சிந்தித்து பாருங்கள் என அறிவுரை கூறி தனது இண்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.