துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
விஷால் நேற்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடினார். கீழ்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் அங்குள்ள முதியவர்களுக்கு, குழந்தைகளுக்கு உணவளித்து, தானும் அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்திருக்கிறேன். பிறந்த நாளன்று நிறைய நல்ல விசயங்கள் நடப்பதால் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.
எனிமி, வீரமே வாகை சூடும் ஆகிய படங்களில் நடிக்கிறேன். தயவுசெய்து போஸ்டர்கள், கட்-அவுட்கள் வைக்காதீர்கள் என்று ரசிகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். வடிவேலு மீண்டும் நடிக்க வருவதில் எனக்கு மகிழ்ச்சி. தமிழ் திரையுலகம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும். ஜிஎஸ்டி வரி, உள்ளாட்சி வரி இரண்டையும் கட்டும் ஒரே மாநிலம் தமிழகம். அதை மாற்றினால் நன்றாக இருக்கும்.
தயாரிப்பாளர்கள் படத்தை உருவாக்கிவிட்டு, திரையரங்குகளா? ஓடிடி தளங்களா என்று திண்டாடுகின்றனர். இனி திமுக ஆட்சியில் திரையுலகிற்கு நல்லது நடக்கும். . கண்டிப்பாக திரைத்துறைக்கு நல்லது செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்கள் விரைவில் திரையரங்குகளுக்கு திரும்புவார்கள்.
வழக்கு நடந்து கொண்டிருப்பதால் கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் சங்கத்திற்கு யாருக்கும் உதவி செய்ய முடியவில்லை. இந்த நிலை மாறும்.
இவ்வாறு விஷால் கூறினார்.