துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நயன்தாரா முன்னணி நடிகை என்றாலும் கதைக்கு தேவை என்றால் இரண்டாவது, மூன்றாவது வரிசையில் இருக்கும் நடிகர்களுடனும் நடிக்கத் தயங்க மாட்டார். இது கதிர்வேலன் காதலில் உதயநிதி, மாயாவில் ஆரி, டோராவில் ஹரிஷ் உத்தமன், திருநாளில் ஜீவா, ஐராவில் கலையரசன் இப்படி ஒரு பட்டியல் இருக்கிறது. அந்த வரிசையில் அடுத்து நயன்தாராவுடன் நடிப்பவர் விதார்த்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் நயன்தாரா. இதில் எலி, தெனாலிராமன் படங்களை இயக்கிய யுவராஜ் இயக்கும் படமும் ஒன்று. ஹீரோயின் சப்ஜெக்ட் படமான இதன் படப்பிடிப்புகள் தற்போது நடந்து வருகிறது. இதில் விதார்த் மற்றும் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீ நடித்து வருகிறார்கள். தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் நயன்தாரா அந்த படத்திற்கு பிறகு இதில் நடிக்கிறார். இதில் நயன்தாராவுக்கு உதவும் நண்பர்களாக விதார்த்தும், ஸ்ரீயும் நடிப்பதாக கூறப்படுகிறது.