புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
நானும் ரெளடிதான், இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து மீண்டும் விஜயசேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. விக்னேஷ்சிவன் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. விஜய சேதுபதி - நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற நயன்தாரா அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்தார். இந்த தகவல் பரவியதை அடுத்து படப்பிடிப்புக்கு செல்லும்போது நயன்தாராவை பார்த்து விட வேண்டும் என்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அந்த ஓட்டலின் முன்பு கூடியிருக்கிறார்கள். இதனால் நயன்தாரா படப்பிடிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பாதுகாவலர்களை வரவைத்து ரசிகர்களின் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார் நயன்தாரா. இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.