டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நானும் ரெளடிதான், இமைக்கா நொடிகள் படத்தை அடுத்து மீண்டும் விஜயசேதுபதியுடன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. விக்னேஷ்சிவன் இயக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. விஜய சேதுபதி - நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாகிறது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற நயன்தாரா அங்குள்ள ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்கியிருந்தார். இந்த தகவல் பரவியதை அடுத்து படப்பிடிப்புக்கு செல்லும்போது நயன்தாராவை பார்த்து விட வேண்டும் என்பதற்காக ஏராளமான ரசிகர்கள் அந்த ஓட்டலின் முன்பு கூடியிருக்கிறார்கள். இதனால் நயன்தாரா படப்பிடிப்புக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து பாதுகாவலர்களை வரவைத்து ரசிகர்களின் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றுள்ளார் நயன்தாரா. இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




