திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
சோசியல் மீடியாவில் நெகடிவ் கருத்துக்களை வெளியிட்டு பப்ளிசிட்டி தேடிக்கொண்டு வருபவர் நடிகை மீராமிதுன். பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த உடனேயே சர்ச்சை வீடியோக்களை வெளியிடத் தொடங்கிய மீராமிதுன், அப்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்றிருந்த டைரக்டர் சேரனைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டார். அதன்பிறகு விஜய், சூர்யா போன்ற நடிகர்களின் மனைவிகளைப்பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு அவர்களது ரசிகர்களிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டார். அப்போது டைரக்டர் பாரதிராஜா உள்ளிட்டோரும் மீராமிதுனுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களைப் பற்றி அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தாழ்த்தப்பட்ட மக்கள் மோசமான குற்றச்செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார்கள். திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா தவறான வேலைகளையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை என அந்த வீடியோவில் ஒரு சமூகத்தைப் பற்றி தவறான கருத்து வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். சோசியல் மீடியாவில் இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அவரை நோக்கி கண்டன குரல்களும் பாய்ந்து கொண்டிருக்கிறது.