கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
பாலிவுட் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருக்கு ராஹா என்ற மகள் இருக்கிறாள். இந்த நிலையில் தற்போது அவர்கள் மும்பையில் தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஆறு மாடியில் சொகுசு பங்களா ஒன்றை ராஹா என்ற பெயரில் கட்டி உள்ளார்கள். 250 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பங்களாவில் விரைவில் ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் குடியேற போகிறார்கள்.
ஆனால் கட்டி முடிக்கப்பட்டுள்ள அந்த சொகுசு பங்களாவை யாரோ வீடியோ எடுத்து அதை இணையத்தில் வைரலாக்கி உள்ளார்கள். இதனால் கடும் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார் ஆலியா பட். இதை அடுத்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛மும்பையில் இடவசதி குறைவாக இருப்பதால் ஒரு வீட்டின் ஜன்னல் இன்னொரு வீட்டை பார்த்தபடி தான் வீடு கட்ட முடியும். அதற்காக இதை வீடியோ எடுத்து வைரலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் இந்த வீடியோவை பதிவிட்டவர்கள் உடனே நீக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார் ஆலியா பட்.