ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், நடிகரான ரன்பீர் சிங் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது குடும்பத்தாருடன் வசிக்க மும்பை, பாந்த்ரா மேற்குப் பகுதியில் 250 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லம் ஒன்றை அவர்கள் கட்டி வருகிறார்கள். அதன் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு ஆலியா பட் அவரது மாமியார் நீத்து கபூர் உடன் வீட்டை மேற்பார்வையிட்டுள்ளார். விரைவில் கிரஹப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவதற்காகவே அவர்கள் சென்று விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மிகவும் ஆடம்பரமாக ஆறு அடுக்கு மாடியாக அந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டிற்கு ரன்பீர் பாட்டி கிருஷ்ணா ராஜ் கபூர் நினைவாக கிருஷ்ணா ராஜ் என்ற பெயரை வைத்துள்ளார்களாம். மாடர்னாகவும், கலாச்சாரத்துடனும் அந்த வீட்டை கடந்த சில வருடங்களாக பார்த்துப் பார்த்து கட்டி வருகிறார்கள்.