கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள 'குறூப்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. துல்கர் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில், சுமார் 35 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இது. அதனால் இந்தப்படத்தை மலையாளம் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் என, ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.
தனது முதல் பான் இந்தியா படம் என்பதால், தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட மிக்ஸிங் பணிகளை துல்கர் சல்மானே ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கிறாராம். எண்பதுகளில் கோழிக்கோட்டை கலக்கிய சுகுமார குறூப் என்கிற கொள்ளையனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மானை செகண்ட் ஷோ என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.