அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி | கல்லீரல் பிரச்னை: சனா ஆஸ்பத்திரியில் அட்மிட் | பிளாஷ்பேக் : ஹிந்தியில் ரீமேக் ஆன சிவகுமார் படம் | பிளாஷ்பேக் : மேற்கத்திய நடனங்களிலும் கலக்கிய லலிதா, பத்மினி | ஹீரோயின் ஆனார் முல்லை அரசி | வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் | முன்னோட்ட வீடியோவுடன் வருகிறது சிம்பு - வெற்றிமாறன் பட அறிவிப்பு | டிவி ஒளிபரப்பில் சாதனை படைத்த 'புஷ்பா 2' | முதல் முறையாக இரட்டை வேடத்தில் அதர்வா |
துல்கர் சல்மான் நடிப்பில் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள 'குறூப்' என்கிற படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. துல்கர் நடித்த படங்களிலேயே மிக அதிக பொருள் செலவில், சுமார் 35 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் இது. அதனால் இந்தப்படத்தை மலையாளம் மட்டுமல்லாது அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் என, ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட இருக்கிறார்களாம்.
தனது முதல் பான் இந்தியா படம் என்பதால், தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட மிக்ஸிங் பணிகளை துல்கர் சல்மானே ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்கிறாராம். எண்பதுகளில் கோழிக்கோட்டை கலக்கிய சுகுமார குறூப் என்கிற கொள்ளையனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மானை செகண்ட் ஷோ என்கிற படத்தின் மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.