மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சினிமா தயாரிப்பில் இப்போது பல நடைமுறைகள் மாறிவிட்டன. தங்களது படம் பற்றிய தகவல்கள் எப்படியாவது 'லீக்' ஆகிவிடக் கூடாது என்பதற்காக பல பாதுகாப்பு வழிமுறைகளை படக்குழுவினர் பின்பற்றுகிறார்கள்.
அவற்றில் ஒன்று அலுவலகங்களில் அணிவதைப் போன்ற ஐ.டி. கார்டு. படக்குழுவில் உள்ள இயக்குனர் முதல் லைட்மேன், உதவியாளர்கள் வரை அனைவருக்கும் அவர்களது பெயர், செய்யும் வேலை ஆகியவற்றுடன் புகைப்பட ஐ.டி கார்டுகள் வழங்கப்படுகிறது. இதனால், படக்குழுவிற்கு சம்பந்தமில்லாமல் யாராவது அரங்கிற்குள் நுழைந்தால் அவர்களைத் தடுக்க வசதியாக இருக்கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் படப்பிடிப்பு தற்போது உக்ரைன் நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்புத் தளத்தில் ஐ.டி. கார்டு அணிந்து ஜுனியர் என்டிஆர் படப்பிடிப்பில் கலந்து கொண்டதை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. பக்கத்தில் இயக்குனர் ராஜமவுலியும் அவருடைய ஐ.டி. கார்டை எடுத்துக் காட்டுவதும் புகைப்படத்தில் உள்ளது.
அது குறித்து இன்ஸ்டாவில், “பல வருடங்களுக்குப் பிறகு ஐ.டி கார்டு அணிகிறேன். செட்டில் முதல் முறை..,” எனக் குறிப்பிட்டுள்ளார். கல்லூரியில் படித்ததற்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஐ.டி கார்டு அணிகிறார் போலிருக்கிறது.