மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தொண்டிமுதலும் திரிக்சாட்சியும். இந்தப்படத்தின் கதையை சஜீவ் பழூர் என்பவர் எழுதியிருந்தார். தற்போது திலீப் அறுபது வயது கிழவராக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துவரும் 'கேசு ஈ வீட்டிண்டே நாதன் என்கிற படத்திற்கும் இவர் தான் கதை எழுதியுள்ளார். மலையாள கதாசிரியர் என்றாலும் தற்போது, இவர் தமிழில் யோகிபாபு கதாநாயகனாக நடிக்கும் படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். இந்தப்படத்தில் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியான வரலாற்று படமான மாமாங்கம் படத்தின் கதையை எழுதிய இவரே, அந்தப்படத்தை இவரே சில நாட்கள் இயக்கினார். ஆனால் தயாரிப்பாளருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட ஈகோ மோதலால் அந்தப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட இவர் தற்போது தமிழில் இயக்குனராக அறிமுகமாவது ஆச்சரியாமான ஒன்று தான்.