பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் | 'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு |
தெலுங்கில் தற்போது பிரமாண்ட படங்களாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா, அல்லு அர்ஜுனின் புஷ்பா ஆகிய படங்கள் இறுதிக்கட்ட பணிகளை எட்டியிருக்கின்றன. கொரோனா இரண்டாவது அலை ஓரளவு குறைந்துள்ள நிலையில் இந்தப்படங்கள் தங்களுக்கான ரிலீஸ் தேதிகளை அறிவிப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன.
கடந்த வருடம் மகேஷ்பாபு மற்றும் அல்லு அர்ஜுன் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அந்தவகையில் மகேஷ்பாபு நடித்து வரும் சர்க்காரு வாரி பாட்டா படம் வரும் ஜனவரி மாதம் சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
ஆனால் தற்போது சூழல் வேறு மாதிரியாக இருப்பதால் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு வசூல் ரீதியாக பாதிப்பு அடைய வேண்டாம் என புஷ்பா படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து மகேஷ்பாபு படத்திற்கு முன்னதாகவே இந்தப்படம் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.