‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? |

பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு ஹீரோயின்கள் வந்த காலம் மாறி இப்போது சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு ஹீரோயின்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் சமீபத்திய உதாரணங்கள்.
இவர்கள் வரிசையில் இப்போது சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா மகாலட்சுமியும் ஹீரோயின் ஆகிறார். பிரிவோம் சந்திப்போம் தொடரில் அறிமுகமான இவர் அதன் பிறகு இளவரசி, நாச்சியார், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடி, ஜூனியர் சினியர் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே பாரிஜாதா என்ற கன்னட படத்திலும், உப்புகருவாடு என்ற தமிழ் படத்திலும் இரண்டாவது நாயகியாக நடித்தவர் , இப்போது கன்னட படம் ஒன்றின் மூலம் ஹீரோயின் ஆகிறார்.




