அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
பெரிய திரையில் இருந்து சின்னத்திரைக்கு ஹீரோயின்கள் வந்த காலம் மாறி இப்போது சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு ஹீரோயின்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். வாணி போஜன், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் சமீபத்திய உதாரணங்கள்.
இவர்கள் வரிசையில் இப்போது சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா மகாலட்சுமியும் ஹீரோயின் ஆகிறார். பிரிவோம் சந்திப்போம் தொடரில் அறிமுகமான இவர் அதன் பிறகு இளவரசி, நாச்சியார், நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்தார். தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் கில்லாடி, ஜூனியர் சினியர் போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார்.
ஏற்கெனவே பாரிஜாதா என்ற கன்னட படத்திலும், உப்புகருவாடு என்ற தமிழ் படத்திலும் இரண்டாவது நாயகியாக நடித்தவர் , இப்போது கன்னட படம் ஒன்றின் மூலம் ஹீரோயின் ஆகிறார்.