'சாமி, திருப்பாச்சி' புகழ் நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார் | 300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா |
த பேமிலி மேன் மற்றும் சர்ச்சைக்குரிய த பேமிலி மேன் 2 ஆகிய தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அடுத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார்கள். அது த பேமிலி மேன் 3 தொடரா அல்லது புதிய தொடரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
ஆனால், அத்தொடரில் நடிக்கும் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அது பற்றி அப்டேட் கொடுத்துள்ளனர்.
இடது கழுத்துப் பகுதியில் 2 டாட்டூக்களைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, “செட்டில் காத்திருக்கிறேன், சீக்கிரம் அழையுங்கள் ராஜ், டிகே. விஜய் சேதுபதியுடன் பிரேமை ஷேர் செய்து கொள்ள காத்திருக்க முடியவில்லை. சாரி, ராஷி கண்ணா, உங்களுடன் செட்டில் ஏற்கெனவே பழகிவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராஷி கண்ணா, “இருக்கட்டும், விஜய் சேதுபதிக்காக மன்னித்துவிடுகிறேன். எனக்கும் அதே போன்றுதான் இருக்கிறது. ராஜ் மற்றும் டிகேவைக் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “மக்கள் செல்வன் வீட்டினுள்... ப்ப்ப்பபபா... குமுதா ஹேப்பி அண்ணாச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், விஜய் சேதுபதி யாருக்குமே இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.