தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் |
பாலிவுட்டில் பப்பராசி புகைப்படக்காரர்களிடம் இருந்து சினிமா பிரபலங்கள் தப்பவே முடியாது. நடிகர்கள், குறிப்பாக நடிகைகள் எங்கு சென்றாலும் அவர்களைப் பின் தொடர்ந்து புகைப்படங்களை எடுப்பார்கள்.
வாக்கிங் போகும் போதும், ஜிம்மிற்குப் போகும் போதும், பர்த் டே பார்ட்டிகளுக்குப் போகும் போதும், வேலை நிமித்தமாக மற்றவர்களைச் சந்திக்கும் போதும் புகைப்படங்களை எடுப்பது வழக்கம். ஆனால், அவர்கள் தனிப்பட்ட விஷயங்களுக்காக மருத்துவமனை சென்றால் கூட விட்டுவைப்பதில்லை. சில சினிமா பிரபலங்களும் அது பற்றி பெரிதாகக் கவலைப்பட்டதில்லை, தங்களுக்கு எந்த ரூபத்திலோ செய்திகளில் அடிபடுவதை விரும்புவார்கள்.
பாலிவுட்டின் முக்கிய கதாநாயகியான பெங்களூருவைச் சேர்ந்த தீபிகா படுகோனே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரபல கதாநாயகனான ரன்வீர் சிங்கை காதலித்து மணம் புரிந்தார். தீபிகா இன்னமும் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. நேற்று தீபிகா, ரன்வீர் இருவரும் மும்பையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு ஜோடியாக சென்றுள்ளார்கள். அதனால், தீபிகா கர்ப்பம் அடைந்துள்ளதார், பரிசோதனைக்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றார் என செய்தி பரவியுள்ளது.
தற்போது சில ஹிந்திப் படங்களிலும், பிரபாஸ் ஜோடியாக ஒரு தெலுங்குப் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படங்களில் நடித்துக் கொடுக்க வேண்டியுள்ளதால் அவர் கர்ப்பம் தரித்திருக்க வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார்கள். தீபிகாவே அது பற்றி அறிவிப்பதற்கு முன்பு மீடியாக்கள் இப்படி செய்தி பரப்புகிறார்கள் என்றும் சிலர் கவலைப்படுகிறார்கள்.