இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
த பேமிலி மேன் மற்றும் சர்ச்சைக்குரிய த பேமிலி மேன் 2 ஆகிய தொடர்களை இயக்கிய ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அடுத்து புதிய வெப் தொடர் ஒன்றை இயக்குகிறார்கள். அது த பேமிலி மேன் 3 தொடரா அல்லது புதிய தொடரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
ஆனால், அத்தொடரில் நடிக்கும் ஷாகித் கபூர், ராஷி கண்ணா, இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோர் அது பற்றி அப்டேட் கொடுத்துள்ளனர்.
இடது கழுத்துப் பகுதியில் 2 டாட்டூக்களைக் காட்டும் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு, “செட்டில் காத்திருக்கிறேன், சீக்கிரம் அழையுங்கள் ராஜ், டிகே. விஜய் சேதுபதியுடன் பிரேமை ஷேர் செய்து கொள்ள காத்திருக்க முடியவில்லை. சாரி, ராஷி கண்ணா, உங்களுடன் செட்டில் ஏற்கெனவே பழகிவிட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு ராஷி கண்ணா, “இருக்கட்டும், விஜய் சேதுபதிக்காக மன்னித்துவிடுகிறேன். எனக்கும் அதே போன்றுதான் இருக்கிறது. ராஜ் மற்றும் டிகேவைக் கேளுங்கள்,” என பதிலளித்துள்ளார்.
இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இருவரும் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டு, “மக்கள் செல்வன் வீட்டினுள்... ப்ப்ப்பபபா... குமுதா ஹேப்பி அண்ணாச்சி,” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், விஜய் சேதுபதி யாருக்குமே இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை.