ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் அளவிலான படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளவர் விஜய் சேதுபதி. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு டிவியில் ஒளிபரப்பான 'நம்ம ஊரு ஹீரோ' நிகழ்ச்சி மூலம் டிவி தொகுப்பாளரானார்.
அந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்தில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த சிலரை பேட்டி கண்டார். சுமார் 16 எபிசோடுகள் வரை அந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பானது. அதன்பிறகு அவர் சினிமாவில் மிகவும் பிஸியாகியதால் டிவி பக்கம் வரவில்லை.
இப்போது 'மாஸ்டர் செப்' நிகழ்ச்சி மூலம் மீண்டும் டிவி பக்கம் தொகுப்பாளராக வந்துள்ளார். சர்வதேச அளவில் பல நாடுகளில் ஒளிபரப்பாகி வரும் அந்த நிகழ்ச்சியின் தமிழ் வடிவத்திற்கு விஜய் சேதுபதிதான் தொகுப்பாளர். வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
தமிழில் விஜய் சேதுபதி எப்படி மீண்டும் டிவி பக்கம் வந்துள்ளாரோ அதே போல தெலுங்கிலும் ஜுனியர் என்டிஆர் வந்துள்ளார். ஆனால், ஜுனியர் என்டிஆர் நான்கு வருடங்கள் கழித்து வந்துள்ளார்.
2017ல் ஸ்டார் மா டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' சீசன் 1 நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி டிவி பக்கம் வந்தார் என்டிஆர். அதற்குப் பிறகு நான்கு வருடங்கள் கழித்து இப்போது ஜெமினி டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'எவரு மீலோ கோட்டீஸ்வரலு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கு உள்ளார். இதற்கான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த மாதம் ஒளிபரப்பாக இருக்கும் இந்நிகழ்ச்சியின் ஒளிபரப்புத் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
'எவரு மீலோ கோட்டீஸ்வரலு' நிகழ்ச்சியின் போட்டியைச் சமாளிக்கும் வகையில் 'ஸ்டார் மா' டிவி தெலுங்கில் 'பிக் பாஸ்' சீசன் 5 விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வ வீடியோ அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.




