பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் படம் ஒன்றை இயக்குனர் ஸாக் ஹாரிஸ் என்பவர் இயக்கி வருகிறார். இதில் தமிழில் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் கதிர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மலையாளத்தில் இதே கேரக்டர்களை ஜோசப் புகழ் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிரேமம் புகழ் ஷராபுதீன் இருவரும் ஏற்று நடிக்கின்றனர். கதாநாயகியாக கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா நடிக்கின்றனர்.
இரண்டு மொழிகளுக்கும் பொதுவான கதாபாத்திரங்களில் நரேன், ஜான் விஜய், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இருமொழியில் படமானாலும் இதன் தமிழ் பதிப்பு சென்னையிலும், மலையாள கதை கொச்சியிலும் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் படபிடிப்பை முடித்த படக்குழுவினர் கடைசி நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.