என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழியில் உருவாகும் படம் ஒன்றை இயக்குனர் ஸாக் ஹாரிஸ் என்பவர் இயக்கி வருகிறார். இதில் தமிழில் நட்டி எனும் நட்ராஜ் சுப்ரமணியம் மற்றும் கதிர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மலையாளத்தில் இதே கேரக்டர்களை ஜோசப் புகழ் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிரேமம் புகழ் ஷராபுதீன் இருவரும் ஏற்று நடிக்கின்றனர். கதாநாயகியாக கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா நடிக்கின்றனர்.
இரண்டு மொழிகளுக்கும் பொதுவான கதாபாத்திரங்களில் நரேன், ஜான் விஜய், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இருமொழியில் படமானாலும் இதன் தமிழ் பதிப்பு சென்னையிலும், மலையாள கதை கொச்சியிலும் நடப்பது போன்று படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் படபிடிப்பை முடித்த படக்குழுவினர் கடைசி நாளன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர்.