பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடல் காட்சியும், இன்னும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு ஒரிரு நாளில் முடியவுள்ள நிலையில் மூன்றாம் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய்யை பாராட்டி 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருந்தேன். அந்த ஆசை விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் நிறைவேறியுள்ளது. நடிகர் விஜய் ஒரு திறமையான நடிகர் என்று அவருக்கு புகாழாரம் சூட்டியுள்ளார். தற்போது 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டதாகவும், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.