எனக்கான போராட்டத்தை அமைதியாக நடத்துகிறேன்: தீபிகா படுகோனே | விருஷபா ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் சூர்யா, வெங்கி அட்லூரி படப்பிடிப்பு | டில்லி முதல்வரை சந்தித்த காந்தாரா சாப்டர் 1 படக்குழு | இங்கிலாந்து பிரதமருடன் அமர்ந்து படம் பார்த்த ராணி முகர்ஜி | 'மெண்டல் மனதில்' என் மனதுக்கு மிக நெருக்கமான படம் : ஜிவி பிரகாஷ் | அடி உதை வாங்கினேன் : ஹீரோவான பூவையார் | ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் |
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பாடல் காட்சியும், இன்னும் சில காட்சிகளும் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு ஒரிரு நாளில் முடியவுள்ள நிலையில் மூன்றாம் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கவுள்ளது. சென்னை விமான நிலையம் அருகே 3 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் விஜய்யை பாராட்டி 'பீஸ்ட்' படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நீண்ட நாட்களாக தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருந்தேன். அந்த ஆசை விஜய் போன்ற பெரிய நடிகர்களுடன் நடிப்பதன் மூலம் நிறைவேறியுள்ளது. நடிகர் விஜய் ஒரு திறமையான நடிகர் என்று அவருக்கு புகாழாரம் சூட்டியுள்ளார். தற்போது 'பீஸ்ட்' படத்தில் விஜய்யுடன் பாடல் காட்சியில் நடித்து முடித்துவிட்டதாகவும், அடுத்த மாதம் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.