ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் பல இசையமைப்பாளர்களும் அவருக்கு ரசிகர்களாகவே இருக்கிறார்கள். இளையராஜாவின் இசையின் பெருமையைப் பற்றி உணர்ந்தவர்கள் அவர்களும் தானே. அப்படி இளையராஜாவின் ரசிகராக அவருடைய இசைக் கூடத்தின் முன்பு 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' படங்களின் இசையமைப்பாளரான கீரவானி என்கிற மரகதமணி ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்துள்ளார். அதோடு அவரையும் சந்தித்து பேசி உள்ளார்.
இதுப்பற்றி கீராவானி டுவிட்டரில் பதிவிட்டு, “காம்தா நகரை கடந்து போகும் போது, இந்த பில்டிங் முன்னால் எடுத்துக் கொண்ட செல்பி மூலம் இன்றைய நாள் சிறப்பான நாள்” எனப் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு டுவீட்டில் இளையராஜாவை சந்தித்த போட்டோவை பகிர்ந்து, ‛‛செல்பி கிப்ட் கிடைத்த சில நிமிடங்களில் இளையராஜாவை சந்தித்தது சிறப்பான நாளாக அமைந்தது'' என பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் பாலசந்தர் தான் இயக்கிய, மம்முட்டி, பானுப்ரியா நடித்த 'அழகன்' படத்தின் மூலம் மரகதமணியை தமிழில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், சிவந்த மலர், சேவகன், ஜாதி மல்லி, பிரதாப், ஹீரோ, கொண்டாட்டம், நான் ஈ” ஆகிய படங்களுக்கு மரகதமணி என்ற பெயரில் இசையமைத்துள்ளார் கீரவானி.




