உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? | லண்டனில் மாஸ்டர் டிகிரியை முடித்த திரிஷ்யம் சின்னப்பொண்ணு | என் மூளையில் இருந்து லோகா கதையை திருடி விட்டார்கள் : இயக்குனர் வினயன் | காந்தார சாப்டர் 1ல் நடித்தது பெருமை : சம்பத் ராம் | இளையராஜா பேரன் யதீஷ்வரின் இசை ஆல்பம் : ரஜினி, கமல் வெளியிட்டனர் | மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் |
சென்னை சேப்பாக்கம் -- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதியை, சில நாட்களாக தொகுதிக்குள் காண முடியவில்லை என்பதால், தொகுதி மக்கள் பலரும், கோரிக்கை மனுக்களோடு அவரது வீடு தேடி சென்றனர். மனுக்களை பெற்ற உதயநிதி குடும்பத்தினரும், தி.மு.க,வினரும், 'எம்.எல்.ஏ., படப்பிடிப்புக்கு போயிருக்காரு. சில நாட்களில் வந்துடுவாரு. உங்களை நேரில் சந்திப்பாரு'ன்னு கூறி அனுப்புகின்றனர்.
இப்படி தினமும், வீட்டுக்கே மனுக்கள் வருவது, உதயநிதியின் தந்தையும், முதல்வருமான ஸ்டாலின் கவனத்துக்கு சென்றது. அதையடுத்து, உதயநிதியிடம் பேசிய ஸ்டாலின், 'கட்சி வேலையும், எம்.எல்.ஏ., பொறுப்பும் அதிகமாக இருக்க, தொடர்ந்து ஏன் நடிக்கிறாய்' என, கேட்டுள்ளார். 'நடித்தது போதும்; தீவிரமாக அரசியல் வேலையை பார்' என்றும் கூறியுள்ளார். இதனால், தற்போது நடித்து வரும், மூன்று படங்களை விரைவாக முடித்து விட்டு, அதன்பின், சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்கு போட, உதயநிதி திட்டம் போட்டுள்ளார்.
இதுகுறித்து, உதயநிதி ஆதரவாளர்கள் கூறியதாவது: மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி நடிக்கிறார். அந்த படத்துக்கு, இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இருந்தாலும், 90 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இன்னும் சில நாட்களுக்குள், மொத்த படமும் முடிந்து விடும்.அடுத்து, 'கனா' பட இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கும், 'ஆர்டிக்கிள் 15' என்ற, மொழி மாற்று படத்தில், உதயநிதி நடிக்க உள்ளார். இதையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ் படத்தில் நடிக்க உள்ளார்.
சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஒதுங்குவதற்கு முன், ரசிகர்கள் பலருக்கும் பிடித்த, ஒரு சிறந்த படமாக, மாரி செல்வராஜ் படம் இருக்கும் என, உதயநிதி நம்புகிறார். மாரி செல்வராஜ் படத்தை முடித்த பின், முழு நேரமும் அரசியல் பணியில், உதயநிதி கவனம் செலுத்துவார். அதிகபட்சம், நான்கு மாதம் மட்டுமே, சினிமா நடிகராக உதயநிதி இருப்பார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.