தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கர்நாடகத்தை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். முஸ்தபாவுக்கு ஏற்கெனவே ஆயிஷா என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. அவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டதாக கூறி அவர் பிரியமணியை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் தற்போது ஆயிஷா, நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. என் கணவர் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என்று பிரச்சினையை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியாமணி தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியாமணி கூறியிருப்பதாவது: எனது கணவர் முஸ்தபாவும், நானும் நல்ல அன்புடன் இருக்கிறோம். எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. அவர் தற்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒருவருக்கொருவர் தினமும் பேசிக்கொள்கிறோம். பேச முடியாவிட்டால் மெசேஜ் அனுப்பிக் கொள்கிறோம். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். என்கிறார் பிரியாமணி.