பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? |

தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கர்நாடகத்தை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். முஸ்தபாவுக்கு ஏற்கெனவே ஆயிஷா என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. அவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டதாக கூறி அவர் பிரியமணியை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் தற்போது ஆயிஷா, நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. என் கணவர் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என்று பிரச்சினையை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியாமணி தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியாமணி கூறியிருப்பதாவது: எனது கணவர் முஸ்தபாவும், நானும் நல்ல அன்புடன் இருக்கிறோம். எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. அவர் தற்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒருவருக்கொருவர் தினமும் பேசிக்கொள்கிறோம். பேச முடியாவிட்டால் மெசேஜ் அனுப்பிக் கொள்கிறோம். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். என்கிறார் பிரியாமணி.