மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தேசிய விருது பெற்ற நடிகை பிரியாமணி கர்நாடகத்தை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். முஸ்தபாவுக்கு ஏற்கெனவே ஆயிஷா என்பவருடன் திருமணம் நடந்திருக்கிறது. அவரை முறைப்படி விவாகரத்து செய்து விட்டதாக கூறி அவர் பிரியமணியை திருமணம் செய்துள்ளார்.
ஆனால் தற்போது ஆயிஷா, நாங்கள் விவாகரத்து செய்யவில்லை. என் கணவர் பிரியாமணியை திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாது என்று பிரச்சினையை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியாமணி தன் கணவரை பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரியாமணி கூறியிருப்பதாவது: எனது கணவர் முஸ்தபாவும், நானும் நல்ல அன்புடன் இருக்கிறோம். எங்கள் உறவில் எந்த விரிசலும் இல்லை. அவர் தற்போது அமெரிக்காவில் வேலை செய்து கொண்டு இருக்கிறார். ஆனாலும் ஒருவருக்கொருவர் தினமும் பேசிக்கொள்கிறோம். பேச முடியாவிட்டால் மெசேஜ் அனுப்பிக் கொள்கிறோம். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம். என்கிறார் பிரியாமணி.