அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் | 'ஜன கன மன' 2ம் பாகம் இருக்கிறது ; உறுதிப்படுத்திய இயக்குனர் | பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என்.காருண் மரணம் ; கேன்ஸ் விருது பெற்றவர் | 'பேமிலிமேன்-3' வெப்சீரிஸ் நடிகர் நீர்வீழ்ச்சியில் விழுந்து மரணம் | போதை மீட்பு மையத்திற்கு அனுப்பப்படும் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ | ஜூலையில் திரைக்கு வரும் அனுஷ்காவின் காட்டி படம் | மகாராஜா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது | பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆர் படம்: அடுத்தாண்டு ஜூன் 25ல் ரிலீஸ் | டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைலர் எப்போது? |
தமிழக திரையரங்குகளில் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்திமிடத்தில் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டிலேயே தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாநகராட்சிகளில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 20, இரு சக்கர வாசகனங்களுக்கு ரூ. 10 வசூலிக்கப்பட்டு வருகிறது. நகராட்சிகளுக்கு ரூ.15 மற்றும் 7 என்றும், பேரூராட்சி கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.5 மற்றும் 3 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று இளவரசு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், பார்க்கிங் கட்டணங்களை நிர்ணயம் செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற இந்த கோரிக்கையை ஏற்றால் அது பொதுநலனுக்கு எதிரானதாகி விடும். அதோடு அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.