ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? |
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, மற்றும் பலர் நடிக்கும் படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் தற்போது படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளார்களாம்.
கொரோனா அலை சமயம் படப்பிடிப்பை நடத்துவது கடினமான ஒன்று. இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு மட்டுமே நடத்த வேண்டும், அதையும் சீக்கிரம் முடிப்போம் என சமீபத்தில் 'நவரசா' பற்றிய பேட்டிகளில் மணிரத்னம் சொல்லியிருந்தார். அப்படியென்றால் தற்போது ஆரம்பமாகியுள்ளது கடைசி கட்ட படப்பிடிப்பாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
படப்பிடிப்பு, முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து முடிந்த பின் அடுத்த வருடம் இப்படம் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதுவரையில் படம் பற்றிய முதல் அறிவிப்பிற்குப் பிறகு வேறு எந்தவிதமான போஸ்டர்களையோ, புகைப்படங்களையோ படக்குழு வெளியிடாதது 'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு வருத்தமாக உள்ளது.