ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
களத்தில் சந்திப்போம் படத்திற்கு பிறகு சத்தமே இல்லாமல் அருள்நிதி ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை யு டியூப் சேனலான எருமசாணி புகழ் விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து சமீபத்தில் திரையுலகின் முன்னணியினருக்கு போட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த பலரும் அதனை வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளனர். இதில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வாங்கி உள்ளது.
இதுகுறித்து அதன் உரிமையாளர் பி.சக்திவேலன் கூறியிருப்பதாவது: அருள்நிதி மிக வித்தியாசமான களங்களில், ரசிகர்கள் ரசிக்கும்படியான படங்களையும், குடும்பத்தினர் கொண்டாடும் படங்களையும், தொடர்ச்சியாக தந்துவருகிறார். அவரது சமீபத்திய படமான களத்தில் சந்திப்போம் திரைப்படம் திரைத்துறையில் அவரது மதிப்பை உயர்த்தியிருக்கிறது.
ஒரு நண்பரின் மூலமாக அவரது இந்த திரைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் முடியும் வரையிலும் படம் எவ்வாறு செல்லும் என்பதை கணிக்கமுடியாதபடி, பல ஆச்சர்யங்களை தந்தது. அனைத்து வகையான ரசிகர்களும் கொண்டாடும் அம்சங்கள் படத்தில் நிரம்பியிருந்தது. படம் முடிந்த கணத்திலேயே படத்தின் அனைத்து உரிமைகளையும் பெற்று விட வேண்டும் என்கிற வேட்கை என்னுள் உண்டானது.
அருள்நிதியின் நடிப்பு மிக அபாரமானதாக இருந்தது. இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு அவர் முன்னணி நட்சத்திரங்களுல் ஒருவராக உயர்வார். பல படங்களில் பெருமையுடன் வழங்குகிறோம் என்பதை வெறும் வார்த்தையாக உபயோகிப்பார்கள். ஆனால் நாங்கள் இப்படத்தை மிக பெருமையுடன் வழங்கவுள்ளோம். இப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள். என்றார்.