பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து | ராஜமவுலி - மகேஷ்பாபு படத்தின் பெயர் 'வாரணாசி'? |
சென்னை 28 உள்பட பல படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. டைரக்டர் அகத்தியனின் மகளான இவர், கிருஷ்ணா நடித்த பண்டிகை என்ற படத்தை இயக்கிய பெரோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த படத்தை விஜயலட்சுமியே தயாரித்திருந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் நிலன் என்றொரு மகன் இருக்கிறான்.
சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகன் நிலனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் விஜயலட்சுமி. இதை நெட்டிசன் ஒருவர் கொச்சையாக விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார்.
இதனால் செம டென்சனாகி விட்டார் விஜயலட்சுமி, அதையடுத்து தனது டுவிட்டரில், ஓ கொழந்தகிட்ட பண்ணவேண்டிய அட்டூழியங்கள்னு ஒரு பேண்டஸி லிஸ்ட வச்சிருக்கியா. பரதேசி. இதை பாத்த உடனே பல்பு எரியுதா. நீங்கள் எல்லாம் நேர்ல வந்து பேசுங்கடா, அழுக்கு ஜென்மங்கள். இதுல அப்பாடக்கர் மாதிரி டுவீட்ஸ். இதுகூட சேந்து டிஸ்கஸ் பண்ண இன்னொரு எச்ச. அடேய் அப்ரசண்டிகளா... என்று கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் விஜயலட்சுமி.