ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து, வெற்றி பெற்ற படம் ‛கைதி'. இப்படம் வெளியாகி இரண்டாடுகள் ஆக போகிறது. இந்நிலையில் ‛‛இது தனது கதை, இதை திருடி தான் கைதி உருவாகி உள்ளது, எனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்'' என கேரளா மாநிலம் கொல்லம் கோர்ட்டில் ராஜீவ் ரஞ்சன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ‛கைதி' படத்தை பிற மொழிகளில் ரீ-மேக் செய்யவும், கைதி 2 உருவாக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்ட அறிக்கை : ‛‛எங்களது கைதி படத்தை ரீ-மேக் செய்யவும், இரண்டாம் பாகம் உருவாக்கவும் கேரள நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக செய்தி, ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது. அதேசமயம் கைதி சம்பந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல் இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் கேட்டுக் கொள்கிறோம்''.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.