புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'த்ரிஷ்யம் 2' படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது ஐந்து மாதங்கள் கழித்து படத்தை சினிமா தியேட்டர்களில் இன்று முதல் வெளியிடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அல்ல, அரேபிய நாடுகளில். யுஎஇ நாடுகளில் 27 தியேட்டர்களிலும், கத்தாரில் 8 தியேட்டர்களிலும், ஓமனில் 2 தியேட்டர்களில் இன்று முதல் திரையிடப்படுகிறது.
இது குறித்த தகவலை படத்தின் நாயகன் மோகன்லாலே அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “த்ரிஷ்யம் 2 கடைசியாக பெரிய திரைகளை சென்றடைந்துவிட்டது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓடிடியில் வெளிவந்த பின்னும் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவது ஆச்சரியம்தான். என்ன இருந்தாலும் சின்னத் திரையான டிவியில் பார்ப்பதை விட பெரிய திரையான சினிமா தியேட்டர்களில் படத்தைப் பார்க்கும் அனுபவம் தனிதானே.