பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா மற்றும் பலர் நடித்த 'த்ரிஷ்யம் 2' படம் கடந்த பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியானாலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்போது ஐந்து மாதங்கள் கழித்து படத்தை சினிமா தியேட்டர்களில் இன்று முதல் வெளியிடுகிறார்கள். ஆனால், இந்தியாவில் அல்ல, அரேபிய நாடுகளில். யுஎஇ நாடுகளில் 27 தியேட்டர்களிலும், கத்தாரில் 8 தியேட்டர்களிலும், ஓமனில் 2 தியேட்டர்களில் இன்று முதல் திரையிடப்படுகிறது.
இது குறித்த தகவலை படத்தின் நாயகன் மோகன்லாலே அவரது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். “த்ரிஷ்யம் 2 கடைசியாக பெரிய திரைகளை சென்றடைந்துவிட்டது,” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஓடிடியில் வெளிவந்த பின்னும் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடுவது ஆச்சரியம்தான். என்ன இருந்தாலும் சின்னத் திரையான டிவியில் பார்ப்பதை விட பெரிய திரையான சினிமா தியேட்டர்களில் படத்தைப் பார்க்கும் அனுபவம் தனிதானே.