அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் 'லூசிபர்'. மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் உருவான இப்படத்தை பிரத்விராஜ் இயக்கியிருந்தார். அரசியல் மற்றும் கேங்ஸ்டர் ஆகிய இரண்டையும் மையமாக வைத்து உருவாகிய இப்படம் வசூல் சாதனையை படைத்தது. இந்த படத்திற்கு இந்திய அளவில் பெரிய வரவேற்பு இருந்தது. தற்போது இந்த படம் பலமொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தெலுங்கு உரிமையை நடிகர் சிரஞ்சீவி வாங்கி வைத்திருக்கிறார். 'தனி ஒருவன்' படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தின் பணிகளை மோகன்ராஜா செய்து வந்தார். தெலுங்குக்கு ஏற்றாற்போல் கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னார் சிரஞ்சீவி. அந்த மாற்றங்களை உடனடியாக செய்துக்கொடுத்தார் மோகன்ராஜா. இதற்கிடையே இந்த படத்திலிருந்து சமீபத்தில் விலகினார் மோகன்ராஜா என்ற தகவல் கசிந்தது. ஆனால் அந்த தகவலை சிரஞ்சீவி தரப்பு மறுத்தது.
இந்நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. 'ஆச்சார்யா' படத்தின் பணிகளும் தற்போது முடியவுள்ளது. இதையடுத்து விரைவில் சிரஞ்சீவி இந்த படத்தில் இணையவுள்ளார். அதேநேரம் நயன்தாரா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சர் மகள் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது தான் நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளார்.