நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு | 3 நாளில் 20 கோடியை அள்ளிய 'தலைவன் தலைவி': மகாராஜா மாதிரி 100 கோடியை தாண்டுமா? | 24 ஆண்டுகளுக்குபின் ஆளவந்தான் நாயகி: விஜய் ஆண்டனியின் 'லாயர்' படத்தில் நடிக்கிறார் | கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் |
தனுஷ் நடித்த திருடா திருடி, சீடன், அமீர் நடித்த யோகி, ஜீவா நடித்த பொறி படங்களை இயக்கிய சுப்பிரமணியம் சிவா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் வெள்ளை விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் இப்படம் உருவாகி உள்ளது.
சமுத்திரக்கனி, ஆத்மியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட பணிகள் அனைத்துமே பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில் கொரோனா பிரச்சினை காரணமாக வெளியாகாமல் இருந்தது.
தற்போது தியேட்டர்கள் திறக்கப்படும் சாத்தியக் கூறுகள் இல்லாததால் படத்தை நேரடியாக டிவியில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஏற்கெனவே தொலைக்காட்சி உரிமம் வழங்கப்பட்டிருந்த நிறுவனத்திடமே படத்தின் வெளியீட்டு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. படத்தை முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் அந்த நிறுவனம் அதன்பிறகு அது நடத்தும் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.
ஏற்கெனவே சமுத்திரகனி நடித்த ஏலே, யோகி பாபு நடித்த மண்டேலே, விக்ரம் பிரபு நடித்த புலிக்குத்தி பாண்டி, ஜி.வி.பிரகாஷ் நடித்த வணக்கம்டா மாப்ளே படங்கள் நேரடியாக டிவியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.