இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தெலங்கானா மாநிலத்தில் இன்று முதல் பொது முடக்கத் தளர்வு மாற்றப்பட்டுள்ளது. தினமும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரையில் மட்டுமே இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படுகிறது. இதனால், சினிமா, டிவி தொடர் படப்பிடிப்புகளை மீண்டும் ஆரம்பிக்க தெலுங்குத் திரையுலகினர் முடிவு செய்துள்ளார்களாம். எப்படியும் இந்த வாரம் தளர்வுகள் கிடைக்கும் என நினைத்து கடந்த வாரத்திலேயே அதற்கான ஆயத்தப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார்கள்.
தமிழகத்தில் இன்னும் சினிமா, டிவி படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அடுத்த வாரம் முதல் அனுமதி அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இருந்தாலும் பெரும்பாலான தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு இங்கு நடைபெறதுவதை விட ஐதராபாத்தில் தான் நடக்கிறது. எனவே, தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகள் விரைவில் ஐதராபாத்தில் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதற்காகவே முன்னேற்பாடாக பல இளம் நடிகர்கள், நடிகைகள் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டு வருகிறார்களாம். படப்பிடிப்புகள் ஆரம்பமானாலும் தியேட்டர்களுக்கான அனுமதி கிடைக்க காலதாமதம் ஆகும் என்கிறார்கள்.