எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தனுஷ் இயக்குனராக அறிமுகமான 'பவர் பாண்டி' படத்தில் தனுஷ் எழுதி ஷான் ரோல்டன் இசையமைத்த 'வெண்பனி மலரே..' பாடல் அப்போது சூப்பர் ஹிட்டான ஒரு பாடலாக அமைந்தது. இப்பாடல் 3 வெர்ஷன்களில் வெளியானது. ஷான் ரோல்டன், ஸ்வேதா மோகன், தனுஷ் ஆகியோர் தனித்தனியாகப் பாடியிருந்தார்கள். இப்போதும் இந்த மெலடி பாடல்களை ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.
நேற்று இப்பாடலைப் பற்றி நினைவு கூர்ந்த ஷான் ரோல்டன், “என் குரல் மற்றும் பியானோ. இந்தப் பாடலை எனக்கு மறக்க முடியாத ஒன்றாக மாற்றிய மிக அழகான ரசிகர்களுக்காக இதை அர்ப்பணிக்கிறேன்,” என அவரே பியானாவில் வாசித்து பாடலைப் பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். “தனுஷ் கொஞ்ச நாட்களுக்கு படத்தை இயக்க மாட்டார், இந்தப் படம் அடுத்த பத்து வருடங்களுக்கு எனக்கு நிறைய ஞாபகப்படுத்தும். அனைவருக்கும் நன்றி“, என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரது பதிவுக்கு தனுஷ், “இதற்கு நீங்கள்தான் காரணம், நன்றி” என பதிலளித்துள்ளார். மேலும் இப்படத்தில் நடித்த பிரசன்னா மற்றும் பலரும் வீடியோவைப் பாராட்டி கமெண்ட் செய்துள்ளனர்.
தனுஷ் மீண்டும் படம் இயக்கினால் அப்படத்திற்கு ஷான் ரோல்டன் தான் கண்டிப்பாக இசையமைப்பார் என்பது ரசிகர்களின் கணிப்பு.