புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என குறிப்பிடத்தக்க படங்களில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி, முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை அஞ்சலி. கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் தாக்குப்பிடித்து, தற்போதும் கைவசம் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் அஞ்சலி. குறிப்பாக சமீபத்தில் வெளியான பவன்கல்யாண் நடித்த வக்கீல் சாப் படம், அஞ்சலி மீது மீண்டும் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.
இந்தநிலையில் புதிய நடிகைகளின் வரவால் தனது வாய்ப்பு குறைந்துள்ளதா என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அஞ்சலி கூறியுள்ளதாவது : “புதிய நடிகைகள், சீனியர் நடிகைகளின் வாய்ப்புகளை பறித்துக் கொள்கிறார்கள் என்று ஒருபோதும் நான் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன்.. காரணம் இயக்குனர் உருவாக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு நமக்கான வாய்ப்பு இருந்தால் அந்த கதாபாத்திரம் நிச்சயம் எங்களை தேடித்தான் வரும். என்னை பொறுத்தவரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்யமுடியுமோ அதை மட்டும் சரியாக செய்தால் போதும்.. அதனால் வாய்ப்புகள் வரவில்லை என்பதற்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்