ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும் என குறிப்பிடத்தக்க படங்களில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி, முன்னணி நடிகையாக வளர்ந்து வந்தவர் நடிகை அஞ்சலி. கிட்டத்தட்ட 15 வருடங்களாக சினிமாவில் தாக்குப்பிடித்து, தற்போதும் கைவசம் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் அஞ்சலி. குறிப்பாக சமீபத்தில் வெளியான பவன்கல்யாண் நடித்த வக்கீல் சாப் படம், அஞ்சலி மீது மீண்டும் வெளிச்சம் பாய்ச்சி இருக்கிறது.
இந்தநிலையில் புதிய நடிகைகளின் வரவால் தனது வாய்ப்பு குறைந்துள்ளதா என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் அஞ்சலி கூறியுள்ளதாவது : “புதிய நடிகைகள், சீனியர் நடிகைகளின் வாய்ப்புகளை பறித்துக் கொள்கிறார்கள் என்று ஒருபோதும் நான் அவர்களை குற்றம் சொல்ல மாட்டேன்.. காரணம் இயக்குனர் உருவாக்கும் கதைகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு நமக்கான வாய்ப்பு இருந்தால் அந்த கதாபாத்திரம் நிச்சயம் எங்களை தேடித்தான் வரும். என்னை பொறுத்தவரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்யமுடியுமோ அதை மட்டும் சரியாக செய்தால் போதும்.. அதனால் வாய்ப்புகள் வரவில்லை என்பதற்காக யாரையும் குறை சொல்ல மாட்டேன்” என கூறியுள்ளார்