WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! |
இயக்குனர் சசி இயக்கிய ஐந்து ஐந்து ஐந்து படத்தில் பரத் ஜோடியாக நடித்தவர் எரிக்கா பெர்ணான்டஸ். அதற்பிறகு விரட்டு, விழித்திரு படங்களில் நடித்தார். தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாமல் பாலிவுட் பக்கம் போனவர் இப்போது அங்கு முன்னணி சின்னத்திரை நடிகை ஆகிவிட்டார்.
குச் ரங் பியார் கே ஐஸே பி என்ற தொடரின் 2 சீசன்களிலும் டாக்டர் சோனாக்ஷி போஸ் கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். தற்போது இதன் 3வது சீசனில் நடித்து வருகிறார். இடையில் கவுஸ்தி சிந்தகி கே என்ற தொடரிலும் நடித்தார். எரிக்கா பெர்ணான்டசுக்கு சில வெப் சீரிசில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், போல்ட் கண்டன்ட் என்ற பெயரில் ஆபாசமாக நடிக்க அவர்கள் கேட்டதாகவும், அதனால் தான் நடிக்க மறுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: வெப் தொடர்களில் சரியான கதைகளே இல்லாமல் வெறும் காசு சம்பாதிக்கும் நோக்கத்திலேயே ஆபாச வெப் தொடர்களை உருவாக்கி வருகிறார்கள். எந்தவொரு காரணமும் இன்றி போல்டாக நடிக்க வேண்டும் என்றால் எப்படி நடிக்க முடியும் என நான் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடத்தில் பதில்களே இல்லை .
போல்ட் எனும் பெயரில் தேவையில்லாத காட்சிகளை கமர்ஷியல் மற்றும் வியாபார நோக்கத்துடன் திணிப்பது எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கதைக்கு முக்கியமாக இருந்தால் அப்படி நடிப்பதில் எனக்கு எந்தவொரு தயக்கமும் இல்லை. ஆனால் வலிந்து திணித்து பணம் சம்பாதிக்க நினைத்தால் அதற்கு நான் உடன்பட மாட்டேன். அதனால்தான் தேடிவந்த வாய்ப்புகளை நிராகரித்தேன். சின்னத்திரை தொடர்களில் நடிப்பதே எனக்கு நிறைவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறது. என்கிறர் எரிக்கா.